பின்பற்றுபவர்கள்

25 மே, 2006

அப்பாவும் மகனும் !

மூன்று வயதுவரை தாய்ப்பால் எனக்கு,
மூன்றே மாதத்தில் புட்டிப்பால் உனக்கு !

பாசத்தின் தாலாட்டில் தூங்கினேன் நான்,
பணிப் பெண்ணுக்கு பயந்தே தூங்கினாய் நீ !

ஐந்து வயதில் ஆரம்ப பள்ளி எனக்கு,
தவழ்ந்த வயதில் பாலர்பள்ளி உனக்கு !

கரும்பலகையில் கைவலிக்க எழுதிபடித்தேன் நான்,
கணனியில் விரல் வைத்து வியக்க வைத்தாய் நீ !

கோலி, கில்லி, பரமபதம் விளையாடினேன் நான்,
கேம்பாயும், வார்கிராப்ட் புகுந்து விளையாடுகிறாய் நீ !

நண்பர்களுடன் கூடி விளையான்டேன் நான்,
கேர்ள் பிரண்டுடன் பாடி மகிழ்கிறாய் நீ !

அன்று தீப்பெட்டி தொலைபேசி எனது,
இன்று வீடியோ சொல்போன் உனது !

தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !

3 கருத்துகள்:

rapp சொன்னது…

//தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !
//
ரொம்ப ரொம்ப அருமையான வரிகள். கலக்கல் கவிதை

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி கண்ணன்

அருமையான கவிதை - நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் வளரும் விதத்தில் எவ்வளவு வித்தியாசம். அருமையான கவிதைக்கு ஏற்ற படம்.

//நண்பர்களுடன் கூடி விளையான்டேன் நான்,
கேர்ள் பிரண்டுடன் பாடி மகிழ்கிறாய் நீ ! //

கலாச்சார மாற்றம்

அத்தனை வரிகளும் அருமை

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) சொன்னது…

இரண்டாண்டு கழித்து அயலகத்தில் இருந்து வந்திருக்கும் பாராட்டு - இப்பதிவு ரசிக்கத்தகுந்ததுதான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்