பின்பற்றுபவர்கள்

15 ஜூன், 2006

நாம 'லா' காரணம் ?

சிங்கப்பூர் பற்றி தெரிந்தவர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது law வும் 'லா' (la) வும் தான்.

மரியாதையாக எல்லோரையும் அழைப்பதற்கு ஏற்ற ஒரு சொல்லாகவே, 'லா' சிங்கப்பூர் வட்டாரத்தில் புழங்கி வருகிறது.

மூன்று வயது குழந்தைமுதல் முதியவர்வரை 'லா' போட்டு அழைக்க'லா'ம். தந்தை மகளையும், மகள் தந்தையையும் 'லா' போட்டு அழைப்பதை எங்கும் பார்க்கலாம். இதனால் மரியாதைக் குறைவாக அழைப்பதாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை. 'லா' என்று அழைப்பதன் 'லா'பம், தெரியாதவர்களையோ, தெரிந்தவர்களையோ ஒருமையில் அழைப்பதா ? பண்மையில் அழைப்பதா ? எந்தவிதத்தில் அழைத்தால் முதலாளிகள் திருப்தி படுவார்கள் என்று நினைக்கத் தேவையில்லை.

கணவனும் மனைவியுமே 'லா' போட்டுதான் பேசுவார்கள். இந்த பழக்கம் நம் தமிழ் வழி வந்திருக்க'லா'மோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நாம் தான் எல்லாவற்றிர்க்கும் நம்மை அறியாமல் 'லா' போட்டு பேசி வருகிறோம். இல்லிங்க'லா' ?

பாத்திங்க'லா' ?
கேட்டிங்க'லா' ?
சொல்லிறிங்க'லா' ?

'ளா' வுக்கும் 'லா' வுக்கும் வேறுபாடு இருந்தாலும். வட்டாரத்தைத் தாண்டி வழங்கப்படுவதால், எனக்கென்னுமோ இந்த 'ளா' தான் அந்த 'லா' வோன்னு சந்தேகமாக இருக்குது. யாராவது தெரிந்தவர்க'லா' இருந்து விளக்கினால். தெரிந்து கொள்வேன்.

வரட்டுங்க'லா' ?
:)

கருத்துகள் இல்லை:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்