பின்பற்றுபவர்கள்

22 ஜூன், 2006

வேற்றுமைகள்

வேறுபாடற்ற உலகம் சாத்தியமா ? எல்லோரும் ஒற்றுமையாக இருக்க முடியாதா ? என்ற கேள்வி காலம் காலமாக கேட்கப்பட்டே வருகிறது. வேறுபாடுகளை வைத்துக் கொண்டுதான் பிரபஞ்சம் இயங்கிவருகிறது. வேறுபாடுகள் இல்லையென்றால் இயக்கம் நின்றுவிடும். இந்த வேறுபாடுகளின் கோட்பாடுகளில் காலமும் நேரமும் முக்கிய பங்கு வகுக்கிறது.



மாற்றம் என்ற பெயரில் வேறுபாடுகளில் பின்னால்தான் அனைவரும் செல்கிறேம். வணிகம் செழிக்க வேண்டுமென்றால் உற்பத்தி செய்யும் பொருள்களில் வேறுபாடுகளை உட்புகுத்துகிறோம். மற்றவற்றலிருந்து எந்த அளவுக்கு விலகி செல்கிறதோ அந்த பொருள் சிறப்புடையதாகவே அறியப்பட்டும், போற்றப்பட்டும் வருகிறது. இத்தகைய மாற்றம் நிறைந்த வேறுபாடுகள், நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியாகவும் நடந்தே வருகிறது.

அசைவு என்ற உயிர்னிலையில் ஒற்றுமை இருந்தாலும் தோற்றம், மற்றும் குணம் என்ற வகையில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு இனத்திலும் பல்வேறு உட்பிரிவுகள் இருந்து ஒன்றைவிட மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுகின்றன. இந்த வேறுபாடுகள் உயிரினத்தின் சிறப்பு என்று சொல்லலாம்.

இந்த வேறுபாடுகள் மனித இனத்தின் குணங்களில் அமைந்திருப்பது சிறப்பானது தான். சீனர்களும் ஜப்பானியர்களும் சுறுசுறுப்பில் சிறந்தவர்களாகவும், ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பில் முன்னோடியாக இருப்பதிலும் வேறுபாடுகள் இன அடிப்படையில் மதிக்கப்பட்டே வருகிறது.

வேற்றுமைகள் நம் இந்தியர்களிடையே மலிந்து காணப்படுகிறது. மொழியால் வேற்றுமை, இனத்தால் வேற்றுமை. இந்த வேற்றுமைகளின் சிறப்பை வைத்துக் கொண்டு நாம் வளர்கிறோமா ? வேற்றுமைகளை வைத்துக் கொண்டு அடுத்த இனத்தை அல்லது மொழி பேசுகிறவனை இகழவே இத்தகைய வேற்றுமைகள் இடம் தருகின்றன. இந்த வேற்றுமைகள் வேண்டாத வேற்றுமைகளாவே மாற்றோரால் அறியப்பட்டு ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தவே பயன்படுத்துகிறோம்.

ஒரு வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே இரத்தவகை மாறுபடும் பொழுது, எந்தவிதத்தில் தங்களை உயர்வாகவும், மற்றோரை தாழ்வாகவும் எண்ணத் தோன்றுகிறதோ ! விந்தையாக இருக்கிறது. ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை, ஆனால் எந்த விரல் குறைந்தாலும் கைகள் நம்பிக்கை இழந்துவிடும் அல்லவா ?

வலதுகையை விட இடதுகை எந்தவிதத்தில் சிறந்தது ? இடதுகை இல்லாவிட்டால் 'அந்த' வேலையை வலதுகை தானே பார்த்தாகவேண்டும்.

வேற்றுமைகள் என்பது சிறப்புகள், ஆனால் அந்த வேற்றுமையை வைத்துக் கொண்டு தூற்றுதல் செய்தால், வேற்றுமைகள் ஆகிவிடும் வெறும் தோற்றப் பிழைகள்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

yeap.... try 2 control.... who will .........

பெயரில்லா சொன்னது…

yeap .. who will......

பெயரில்லா சொன்னது…

Vaarthaiyum, Nadaiyum inithu

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்