பின்பற்றுபவர்கள்

23 ஜனவரி, 2008

ஜெயலலிதாவின் கனவுக்கு புத்துயிர் ! - மோடி எபெக்ட்

பரஸ்பரம் சொறிந்து கொள்ள ... அறிந்து கொள்ள மோடி மற்றும் ஜெ வின் சந்திப்பு நடந்தாலும், 42 வகை உணவுகளுடன் ராஜ விருந்து சாப்பிட்டுக் கொண்டே தமிழகத்தில் இந்துத்துவத்தை மேம்படுத்தும் பேச்சுவார்த்தை நடந்திருக்கும் போல் இருக்கிறது. மோடி வந்து சென்ற ஒரே வாரத்தில் இராமேஸ்வரத்தில் பசுமாடுகள் இறந்ததை பிரச்சனை ஆக்கி கருணாநிதி பதவி விலகவேண்டும் என்று அறிவித்தார் ஜெ.

அதனைத் தொடர்ந்து, நேற்று "சேது சமுத்திர திட்டத்தை இராமர் பாலத்தை இடிக்காமல் செயல்படுத்த அறிவிக்கவேண்டும்' ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதாம் பாலம் என்றதை கர்பனையாக இராமர் பாலம் என்ற பெயரில் புளுகிவருவதை நன்கு அறிய(பிரபல) படுத்தும் நோக்கில் தொடர்ந்து இராமர் பாலாமாகவே சித்தரிக்கப்படுகிறது, வால்மிகி இராமயணப்படியே இராமர் பாலம் இராமன் இலங்கையில் இருந்து திரும்பியதும் அமிழ்த்தி அழிக்கப்பட்டதாக கதைகள் இருப்பதை சமய ஆர்வலர்கள் காட்டி மணல் திட்டு இராமர் பாலம் என்று சொல்வதை மறுத்து வருகின்றனர்.

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப செய்யும் மேசடிகள் இவை, 'இராமர் பாலம்' இருப்பதாக சொல்லி தடை வாங்குவதன் மூலம் பாமரர் நம்பிக்கையை அப்படியே கட்டிக் காத்து, இந்து மூட நம்பிக்கைகள் நீர்த்துப் போகாமல் இருப்பதற்கும் அதன் மூலம் ஆதிக்க சக்திகள் தங்கள் பலத்தை இழந்துவிடாமல் இருப்பதற்கும் செய்யப்படும் மாற்று ஏற்பாடுகள் இவை. இதெற்கெல்லாம் ஏன் ஜெ துணை போக வேண்டும் ?

ஜெவின் இந்துத்துவ அரசியல் உயர்சாதி மனப்பான்மையால் வந்தது என்று சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் இந்துராம் முதல் இந்திய பிரதமராக இருந்தவர்களின் தலையீட்டையும் காதில் வாங்காமல் பெரியவாளையும் சின்னவாளையும் கைது செய்து சிறைக்கு அனுப்பியவர். அதன் பிறகு இன்றுவரை ஜெவுக்கும் - காஞ்சி நிறுவனத்துக்கும் அதுகுறித்தான சமரசம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

ஜெ-வைப் பொறுத்தவரை லாபம் இல்லாமல் எந்த செயலையும் செய்ய மாட்டார். ஜெ-வுக்கு உயர்சாதி பாசம் / வெறி இருந்திருந்தால் அன்று 13 மாதத்தில் வாஜ்பாய் ஆட்சிக்கு செக் வைத்து மத்திய அரசை கவிழ்க்கும் நிலைக்கு சென்றிருக்க மாட்டார். ஜெ மாநில கட்சிக்கு தலைவி முதலமைச்சாராக இருந்தவர் என்ற போதிலும் தேசிய அரசியலில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவாகவேண்டும், பிரதமர் ஆகவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். அதற்கு அவர் எடுத்த முன்றாவது அணி முயற்சியில் இவரது தன்னிச்சையான செயல்பாடு மற்ற மாநிலதலைவர்களுக்கு பிடிக்காததால், அதில் இருந்து சத்தமில்லாம் வேலைக்கு ஆகாது என்று விலகிக் கொண்டார்.

தற்போது அவரின் தேசிய அரசியல் மற்றும் பிரதமர் கனவுக்கு கைகொடுக்கும் கட்சியாக தெரிவது பிஜேபிதான். பிஜேபியில் மோடிக்கு இருக்கும் செல்வாக்குக்கு ஈடாக வளர்ந்துவிட்டால் பிரதமர் நாற்காலியை கைப்பற்ற முடியும் என்று ஜெ நினைக்கக் கூடும். அதற்கு அடி எடுத்துவைப்பதற்காகத்தான் இந்துத்துவ அரசியலை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். எம்ஜிஆரின் அதிமுகவிற்கு தலைமை ஏற்பதால் தமிழகத்தில் ஜெவின் அரசியலுக்கு கவலை இல்லை. தேசிய அரசியலில் இறங்க காங்கிரஸ் அல்லது பிஜேபி கைகோடுக்க வேண்டும். காங்கிரசாருக்கு ஜெவின் போக்கு தெரியும் அதனால் அவர்கள் முன்வரமாட்டார்கள். பிஜேபி ? ஏற்கனவே சூடுபட்டாலும் உயர்சாதி பாசம் மற்றும் செலக்டீவ் அம்னீசியாவால் தமிழகத்தில் ஜெ வின் துணை இல்லாமல் வளரமுடியாது என்பதால் வலியவே ஜெவின் தயவை எதிர்ப்பார்ப்பார்கள். இது ஜெவை பொறுத்தவரை லாபமே.

எம்ஜிஆரின் பெயரைச் சொல்லிக் கொண்டு தமிழகத்தில் வளர்ந்தது போலவே, இந்துத்துவ அரசியல் ஆதரவு நிலையால் தேசிய அளவில் வளரமுடியும், பிரதமராக முடியும் என்ற தன் நம்பிக்கை (கனவு) மோடியின் வெ(ற்)றிக்கு பின் ஜெ. உறுதி செய்து கொண்டுள்ளார். மோடியின் வருகை ஜெ-வின் தேசிய அரசியல் ஆசைக்கு தீணி போட்டு இருக்கிறது.

1 கருத்து:

கோவை சிபி சொன்னது…

மிகச் சரி.ஜெ. வின் செல்வாக்கு சரிந்து வரும் நேரத்தில் இந்துத்துவ அரசியலை நேரிடையாக கையிலெடுக்காமல் இம்மாதிரியான மறைமுக அரசியலை தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.மேலும் இப்போதைய தமிழக சூழலில் இதற்கு ஆதரவு இருக்குமென்றே தோன்றுகிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்