பின்பற்றுபவர்கள்

5 பிப்ரவரி, 2008

ஜெ ஆடு(ம்) புலி ஆட்டம் !

ராமேஷ்வர கோவிலில் மாடுகள் இறந்ததற்கும், இன்னும் ஏனைய புண்ணாக்கு காரணங்களுக்காக திமுக அரசு பதவி விலகவேண்டும், அதனைத் தொடர்ந்து தேர்தல் நடந்தால் எப்படியும் அரியணை ஏறமுடியும் என்ற சிம்ம (சிம்ம ராசிக்காரர்) சொப்பனத்தில் நாளொரு அறிக்கையை செய்தி ஊடகங்களுக்கு அளித்து வந்தார் ஜெ.

அண்மையில் மோடிக்கு ஜெ வைத்த மாபெரும் விருந்திற்கு பிறகு பாஜகவும், அதிமுகவும் நெருங்குவதாகவும், அதுவே விருப்பம் என்பது போல் பாஜக இல.கனேசன் முதல் அறிவிக்கப்படாத பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான சோ வும் தங்கள் அவாவை வெளிப்படுத்தினர் (ஆசை வெட்கம் அறியாதாம்)

இப்படி கூட்டணி அமைந்தால் வெற்றி கிடைக்குமா என்று பல்வேறு அலசல்களுக்கு பிறகு பாஜகவுக்கு விருந்தே அதிகம் என்று ஜெ நினைத்ததாகவும், பாஜக கூட்டணி என்றால் அதிமுகவுக்கு பாதகாமத்தான் அமையும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் கொடுத்த ஆலோசனையின் பேரில் பாஜகவுக்கு நிரந்தர 'நோ' சொல்லிவிட்டாராம் ஜெ.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரசை நெருங்கினால் அடுத்த தேர்தல் தனக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் ஜெ. காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுமா ? ஜெ வினால் பல முறை அவமானப்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சோனியா இதற்கு ஒப்புக் கொள்வாரா ? சோனியா மற்றும் ராகுல் காந்தியின் தயவு வேண்டும் என்பதற்காக 'புலி' வந்துட்டது அரசியல் நடத்துகிறார் ஜெ. தமிழகம் புலிகளின் சரணாலயம் ஆகிவிட்டது என்று குற்றம் சுமத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சியனரின் மனதையும், ராஜிவ் காந்தியின் இல்லத்தினரையும் கனிய வைக்கமுடியும் என்ற நம்புகிறார். காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு இளங்கோவன் போன்றவர்களிடம் இருந்து வரவேற்பு இருக்கிறது.

காங்கிரஸ் அதிமுக வை ஆதரித்தால் மத்திய ஆட்சியில் பங்கு கேட்பதில்லை என்றும் தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்தால் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கொள்ளலாம் என்று தூண்டில் போடப்பட்டு இருக்கிறது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன. இப்பொழுதெல்லாம் காங்கிரஸ் திமுக அரசுக்கு எதிராக பெரியதாகவே குரல் எழுப்புவதற்கு இதுவே காரணம். எங்கள் தயவில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவரின் வெளிப்படை பேச்சுக்கும் இதுவே காரணம்.

ஜெவின் கைங்கர்யத்தால், 13 மாதத்தில் அல்ப ஆயுளில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்ததை காங்கிரசும் மறந்திருக்காது. ஒருவேளை காங் - அதிமுக கூட்டணி என்று முடிவாகிவிட்டால் புலிகள் நுழைந்துவிட்டதாக, சட்ட ஒழுங்கு காரணம் காட்டி திமுக ஆட்சியை பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் போது கலைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் சற்று தீவிரமாகவே காய்நகர்த்திக் கொண்டிருப்பது தான் தற்போது நடக்கும் ஜெ வின் ஆடு(ம்) புலி ஆட்ட அரசியல். பாராளுமன்ற தேர்த்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் வர இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஜெ புலி அரசியல் காய் நகர்த்தி காங்கிரஸ் ஆட்டை வெட்டுவாரா ?

1 கருத்து:

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam சொன்னது…

எப்படியோ அம்மா அளவுக்கதிகமாக அழுது, புரண்டு சராசரி மனிதனிடமும் புலிகளின் மீதும், ஈழமக்கள் மீதும் பாசத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் நல்லதுதான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்