பின்பற்றுபவர்கள்

28 ஜூலை, 2008

மருத்துவர் இராமதாஸ் ஐயாவின் பிரசவ வைராக்கியம் !

இராமதாஸ் ஐயாவின் அரசியல் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பாமக எதிர்கட்சியில் ஒன்றாக சட்டமன்றத்தில் அமர்ந்தாலும் சரி, ஆளுங்கட்சியுடன் ஒட்டிக் கொண்டு அமர்ந்தாலும் சரி. உரத்தக் குரல் எழுப்புவது ஐயாக் கட்சிக்கு இணை எந்தக் கட்சிக்கும் கிடையாது. சாதி அரசியல், சாதிக் கட்சி என்பதைத் தவிர்த்துப் பார்த்தோமேயானால் இராமதாஸ் ஓரளவுக்கு ஆளும் கட்சிக்கு வளைந்து கொடுக்காமல் எப்போதும் ஆப்பு அரசியலே செய்கிறார் என்றே நினைக்கிறேன்.

2001ல் அதிமுக ஆட்சியில் அமர்ந்த அப்போது பாமக அதிமுக கூட்டனியில் தான் இருந்தது, ஜெ ஆட்சியில் அமர்ந்த ஒரு மாதத்திலேயே கலைஞர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து அதிர்ச்சியடைய வைத்தார். திமுகவின் அப்போதைய கூட்டணிக் கட்சியான பாஜகவே இதுபற்றி வாய்திருக்காமால் இருக்கும் போது, ஜெ வுடன் கூட்டணியில் இருந்தாலும் தைரியமாக ஜெவின் அடாவடியை கைது நடந்த மறுநாளே விமர்சித்து கூட்டணியை பிறகு கூட்டணியை முறித்துக் கொண்டவர் இராமதாஸ். ஆளுங்கட்சியிடன் கூட்டணி என்றால் பெரிய கட்சியான காங்கிரஸ் கூட எதிர்த்துப் பேசக் கூடாது என்பது போன்ற ஒப்பந்த அரசியல் தான் தமிழகத்தில் நடந்தேறியது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து வென்ற ஒரே மாதத்திலும், பதவி ஏற்ற அதே நாளிலும் ஜெவின் செயல்பாடு காரணாமாக இராமதாஸ் ஜெவை புறக்கணித்தார் என்பதை யாரும் மறக்க முடியாது.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடாது என்பது எழுதாதவிதியாக வைத்துக் கொண்டு இருப்பதால் என்னவோ திமுக - பாமக கூட்டணியில் விரிசல் விழ அதுவே காரணம். கடந்த காலங்களில் இராமதாஸ் ஜெவை விமர்சனம் செய்ததை கலைஞரோ, திமுகவினரோ நினைத்துப்பார்ந்திருந்தால் இந்த விரிசல் மறைக்கப்பட்டு இருந்திருக்கும். இரண்டு நாள்களுக்கு முந்தைய கலைஞர் அறிக்கையில் அண்மைய மின்வெட்டுகளுக்கு கடந்த கால ( மூன்றாண்டுக்கு முன்பு இருந்த ) அதிமுக ஆட்சியே காரணம் என்று சப்பைக் கட்டுகிறார். ஜெ ஆட்சியின் குளறுபடிகளை கண்டுபிடிக்க எங்களுக்கும் மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது போல் மறைமுகமாக தங்கள் கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தும் பேச்சு அது. திமுக அரசு குடோனில் வைத்திருந்தவை அனைத்தும் புழுத்த அரிசி என்று குறை கூறி, அந்த அரிசியும் கிடைக்காத ஏழைகள் உள்ள நாட்டில் அத்தனை மூட்டைகளையும் ஆழக் குழி தோண்டி புதைத்த ஜெவின் மட்டமான அரசியலுக்கும், தற்போது மின்வெட்டுக்குக் காரணமாக ஜெவின் ஆட்சியைக்
குறை சொல்லும் கலைஞரின் அதே மட்டமான அரசியலுக்கும் யாதொரு வேறுபாடும் இல்லை.

காடுவெட்டி குரு தேசத் தியாகி என்பது போல், தற்போது இராமதாஸ் ஐயா பிரச்சாரம் செய்வது மிக மட்டமான அரசியலே, பிற கட்சியின் அரசியல் செயல்பாடுகளை மனம் கோணாமல் விமர்சிக்கும் இராமதாஸ் ஐயா, தன்னுடைய கட்சியனர் மட்டும் எதோ உத்தமர் போல் பேசி வருவது நகைப்புக்கிடமாகவே இருக்கிறது. பாமகவிற்கு செல்வாக்கு உள்ள இடங்களில் தான் அண்மையில் தலித் கிறித்துவர்களுக்கும் - வன்னிய கிறித்துவர்களுக்கும் மோதல் நடைபெற்று இறுதியில் சாதிப்பெருமை காக்க வன்னிய கிறித்துவர்கள், தாய்(!) இந்துமதம் திரும்புவதாக அறிவித்தனர். இந்துமதத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் இராமதாஸ் இதுபற்றி வாய் திறக்கவே இல்லை. அங்கு நடைபெற்ற வன்னியர் - தலித் மோதல்களுக்குப் பிறகு அவர்களின் ஒற்றுமைக்காக என்ன செய்தார் ? ஒன்றும் இல்லை. ஆனால் திருமாவும், நானும் சகோதரர்காள் என்று மேடைக்கு மேடை கூச்சமில்லாமல் சொல்லிக் கொள்வார். ஒட்டுக்கள் சிதராமல் இருக்க ஒற்றுமை என்பது மேல்மட்ட அளவில் இருந்தாலே போதும் என்கிற மனநிலையில் தான் அண்ணன் திருமாவுடன் இராமதாஸ் ஐயா கைகோர்த்துக் கொண்டு இருக்கிறார்.

தற்போது இராமதாஸ் ஐயா திமுக அரசின் மீது வைக்கும் மற்றொரு குற்றச் சாட்டு நகைப்பிற்கு இடமாகவே இருக்கிறது. 'இங்கு சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை' என்கிறார். குரு கைது நடவெடிக்கை இல்லை என்றால் இதெல்லாம் இருக்கும் போல. வன்னிய சாதித் தலைவன் என்ற போர்வையில், பாதுகாப்பில் குரு கண்டபடி ஒருமையில் கலைஞரை, ஆர்காடு வீராசாமியை, ராஜாவை படுகேவலமாகப் பேசி, கொலை மிரட்டல் விட்டதைப் பொறுக்கமுடியாமல் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று தானே குரு கைது செய்யப்பட்டார் ? பின் எங்கே சட்ட ஒழுங்கு காணாமல் போனது ?

இனி எஞ்சியிருக்கும் 2 ஆண்டுகால திமுக அரசுக்கு எதிராக அதிமுகவோ, பிற எதிர்கட்சிகளோ கேள்விக் கேட்கத் தேவை இல்லை என்று நினைக்கும் அளவுக்கு திமுக அரசின் மீது குற்றச்சாட்டு கணைகளை வைத்து அறிக்கைப் போர் நடத்திவருவார்.

'இனியும் திமுக அரசுவுடன் கூட்டணியா ? இனி திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்பது தான் அவரின் உச்சகட்ட நகைச்சுவை. தேர்தல் நெருங்க நெருங்க...'இது கொள்கை கூட்டணி அல்ல...தேர்தல் கால கூட்டணி' என்ற அறிவிப்புகளும் வரும்.

*********

பின்குறிப்பு : படத்தில் இருக்கும் நிழல் படம் குறித்து, படத்தில் நான், மருத்துவர் இராமதாஸ் ஐயா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி. 2006ல் பொங்குதமிழ்ப் பண்னிசை விழாவுக்காக மருத்துவர் ஐயாவும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தியும் சிங்கை வந்திருந்த போது (முன்னாள்) நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றதால் ,மருத்துவர் இராமதாஸ் ஐயாவின் அருகில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நண்பர் அவரது நிழல்படக் கருவியிலேயே க்ளிக்கிக் கொடுத்தது தான் இந்தப்படம். அந்த பொன்னான வாய்ப்பு வழங்கிய நண்பருக்கு நன்றி. அதே நண்பருடன் மற்றொருமுறை வீரமணி ஐயா கலந்து கொண்ட திருக்குறள் விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்ப்படம் கூட இருக்கிறது, எப்போதாவது வலை ஏற்றுகிறேன்.

9 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)

வேல்பாண்டி சொன்னது…

கொவி,

குழலி எப்போது முன்னாள் நன்பர் ஆனா?

- வேல் -

வேல்பாண்டி சொன்னது…

கொவி,

குழலி எப்போது முன்னாள் நன்பர் ஆனார்?

- வேல் -

கோவி.கண்ணன் சொன்னது…

//வேல்பாண்டி said...
கொவி,

குழலி எப்போது முன்னாள் நன்பர் ஆனார்?

- வேல் -
//

ஒருவருடைய விருப்பம் இல்லாமல் மாமா என்று முறை வைத்துக் கூப்பிட முடியுமா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்ல அலசல் கட்டுரை திரு.கோவி.கண்ணன்.
பழையச் செய்திகளைக் கூட நுணுக்கமாக ஞாபகம் வைத்து எழுதியது அருமை.

அன்புடன்,
ஜோதிபாரதி.

கிரி சொன்னது…

//ஜெ வுடன் கூட்டணியில் இருந்தாலும் தைரியமாக ஜெவின் அடாவடியை கைது நடந்த மறுநாளே விமர்சித்து கூட்டணியை உடனே முறித்துக் கொண்டவர் இராமதாஸ்.//

இதை சாக்கா வைத்து என்று நினைக்கிறேன் ஹி ஹி ஹி

//கடந்த காலங்களில் இராமதாஸ் ஜெவை விமர்சனம் செய்ததை கலைஞரோ, திமுகவினரோ நினைத்துப்பார்ந்திருந்தால் இந்த விரிசல் மறைக்கப்பட்டு இருந்திருக்கும்//

ஏங்க இவரு பொழுது போகலைனு விமர்சனம் செய்தா? செய்தி தாள்ல பேரு வரணும்னு விமர்சனம் செய்தா?

//அண்மைய மின்வெட்டுகளுக்கு கடந்த கால ( மூன்றாண்டுக்கு முன்பு இருந்த ) அதிமுக ஆட்சியே காரணம் என்று சப்பைக் கட்டுகிறார்.//

எந்த ஆட்சி வந்தாலும் இப்படி தான் சப்பை கட்டு கட்டுவார்கள்

//காடுவெட்டி குரு தேசத் தியாகி என்பது போல், தற்போது இராமதாஸ் ஐயா பிரச்சாரம் செய்வது மிக மட்டமான அரசியலே//

ஏங்க அவரு மிக பெரிய தியாகி தான்! :-)))

//குரு கைது நடவெடிக்கை இல்லை என்றால் இதெல்லாம் இருக்கும் போல//

ஹி ஹி ஹி

//'இனியும் திமுக அரசுவுடன் கூட்டணியா ? இனி திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்பது தான் அவரின் உச்சகட்ட நகைச்சுவை. //

நம்மை வைத்து காமெடி தான் பண்ணுகிறார் சரி அதை விட காமெடி 2011 பா மா க ஆட்சி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மருத்துவர் அய்யாவுடன் கொண்ட புகைப்பட நட்பினால் ;) இனி கோவி கண்ணன், கோவி கண்ணன் ஐயா என் அழைக்கப்படுகிறார். ஹி ஹி ஹி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
நல்ல அலசல் கட்டுரை திரு.கோவி.கண்ணன்.
பழையச் செய்திகளைக் கூட நுணுக்கமாக ஞாபகம் வைத்து எழுதியது அருமை.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதிபாரதி,

பழசையெல்லாம் மறக்கமல் இருப்பதும் ஆபத்தானதுதானே. :)
நம்மை வாய் கூசாமல் வசைபாடுபவர்களை பதிலுக்கு கடந்தகாலத்தில் பேசிவிட்டிருந்தால்... நிகழ்காலத்தில் எதிரே பார்க்கும் போது அதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கும், அதனாலேயே சீண்டுவோருக்கு சரியான பதில் சொல்லாமல் இருக்கப் பழகிக் கொண்டேன்.

லக்கிலுக் சொன்னது…

//ஜெவின் அடாவடியை கைது நடந்த மறுநாளே விமர்சித்து கூட்டணியை உடனே முறித்துக் கொண்டவர் இராமதாஸ்.//

கோவியாரே!

நல்ல பதிவு. இந்த தகவல் மட்டும் தவறானது என்று நினைக்கிறேன்.

2001ல் ஜெ. ஆட்சிக்கட்டில் ஏறியதுமே பதவி ஏற்பு விழாவின் போது அய்யாவுக்கு சரியான மரியாதை தரவில்லையென்று கூறி முட்டல் மோதலை ஆரம்பித்து விட்டார். அதன் பிறகும் அய்யா கோட்டைக்கு சென்று அம்மாவை வாழ்த்த முயற்சித்தும் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. சரியென்று போயஸ் கார்டனுக்கு நேரில் சென்று வாழ்த்த முயற்சித்தபோதும் அவரை பார்க்காமலேயே அவமானப்படுத்தி ஜெ. திருப்பி அனுப்பினார். இதெல்லாம் அய்யாவே அதிமுக உறவு முறிந்தது என்று அறிவித்தபோது பத்திரிகையாளர்களிடம் சொன்னது.

கலைஞர் கைது காரணமாக தான் அய்யா அம்மாவை முறைத்துக் கொண்டார் என்று சொல்வது வரலாற்றுப் பிழையாகி விடக்கூடும். கலைஞர் கைதினை அய்யா கண்டித்தது தமிழினப்பாசத்தின் காரணமாகவே என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// லக்கிலுக் said...
//ஜெவின் அடாவடியை கைது நடந்த மறுநாளே விமர்சித்து கூட்டணியை உடனே முறித்துக் கொண்டவர் இராமதாஸ்.//

கோவியாரே!

நல்ல பதிவு. இந்த தகவல் மட்டும் தவறானது என்று நினைக்கிறேன்.

2001ல் ஜெ. ஆட்சிக்கட்டில் ஏறியதுமே பதவி ஏற்பு விழாவின் போது அய்யாவுக்கு சரியான மரியாதை தரவில்லையென்று கூறி முட்டல் மோதலை ஆரம்பித்து விட்டார். அதன் பிறகும் அய்யா கோட்டைக்கு சென்று அம்மாவை வாழ்த்த முயற்சித்தும் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. சரியென்று போயஸ் கார்டனுக்கு நேரில் சென்று வாழ்த்த முயற்சித்தபோதும் அவரை பார்க்காமலேயே அவமானப்படுத்தி ஜெ. திருப்பி அனுப்பினார். இதெல்லாம் அய்யாவே அதிமுக உறவு முறிந்தது என்று அறிவித்தபோது பத்திரிகையாளர்களிடம் சொன்னது.

கலைஞர் கைது காரணமாக தான் அய்யா அம்மாவை முறைத்துக் கொண்டார் என்று சொல்வது வரலாற்றுப் பிழையாகி விடக்கூடும். கலைஞர் கைதினை அய்யா கண்டித்தது தமிழினப்பாசத்தின் காரணமாகவே என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை.

1:16 PM, July 28, 2008
//

லக்கி ஐயங்கார்,

குரு ஆறுமாதத்திற்கு முன்பு பேசியதை ஆர்காட்டார் பெரிசுபடுத்தி வெடிக்க வைத்து கூட்டணியில் இருந்து வெற்றிகரமாக கழட்டிவிட்டார். நீங்கள் சொல்வது தெரியும் ஜெவின் பதவி ஏற்பு விழாவுக்கு முறைப்படி அழைப்பு வரவில்லை என்று முரண்டு பிடித்தார். ஆனால் வெளிப்படையாக கூட்டணி முறிந்ததாக உடனேயே அறிவிக்கவில்லை. கலைஞரின் கைது காரணமாக அம்மாவை ஐயா முறைத்துக் கொண்டார் என்று சொல்லவில்லை. மத்தியில் ஆட்சி நடத்திய பிஜேபி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த போது இராமதாஸ் தான் முதலில் எதிர்ப்பை பதிவு செய்தார் என்று ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்