பின்பற்றுபவர்கள்

22 பிப்ரவரி, 2009

ஐ....நாவுக்கு அப்பாவிகள் கேள்வி !

கண்டனம் சடங்கில் மொய் வைப்பது தான் அது பற்றிய அறிக்கை, இது போன்று கண்டன திருவிழாக்களை நடத்துவது அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு பொழுது போக்கு. யார் முதலில் கண்டனம் தெரிவிப்பது என்ற போட்டி தான் இதுவரை நடைபெற்றதில்லை. கிட்டதட்ட அனைத்து நாடுகளுமே கண்டன திருவிழாவில் பங்கேற்கும். காந்திதேசமாச்சே... கண்டனம் பதிய வைப்பதில் இந்தியாவே முன்னிலை வகிக்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் நினைத்து பெருமை பட வேண்டும்.

சதாம் உசேன் தூக்கில் இடப்பட்ட நிகழ்வுகளைக் கூட பன்னாட்டு கண்டனங்களுடன் உலகம் மறந்துவிட்டது. (பின்னே பழையதெல்லாம் மறக்கனும் என்று தெரியாமலா சொல்கிறார்கள்). ஐநா அரங்கம் (சபை) ஒன்று இருப்பதே உலகில் எங்காவது அமெரிக்கா போர் தெடுக்கும் பொழுது தான் தெரியவரும். ஐநா சபை என்பதை அமெரிக்கவின் அறிவிக்கப்படாத பன்னாட்டு கட்டுப்பாட்டு (அமெரிக்கா தவிர்த்து பல நாடுகளைக் கட்டுப்படுத்தும்) மையம் என்றுதான் பாமரர்கள் கூட சொல்கிறார்களாம்

(பாமரருக்கு ஐநா வெல்லாம் தெரியுமா ? அவங்களுக்கு தெருநாய் மட்டும் தானே தெரியும் என்கிற அறிவு பூர்வமான கேள்விகள் வரவேற்கப்படுகின்றன. அப்படி கேட்பவர்கள் தினமலர் வாசகர் கடிதம் படித்ததே இல்லை என்றே நினைக்கிறேன். அங்கு கடிதம் எழுதுபவர்கள் அனைவருமே 'அப்பாவிகள் கேட்கிறார்கள், 'பாமர்கள் கேட்கிறார்கள் என்றே எழுதுவார்கள். பின்னே அப்பாவிகளின் நாடி துடிப்பை அறிந்த ஒரே 'தமிழ்' நாளிதழாச்சே தினமலர், அதை படித்து வாசகர் கடிதம் எழுதும் அனைவருக்குமே அந்ததந்த பகுதியில் வாழும் சேரி, அப்பாவி மக்களின் நாடி துடிப்பும், அங்கே குட்டையில் ஊறும் அப்பாவி பன்றிகளின் மொழி கூட தெரிந்து வைத்திருப்பார்கள். நீங்கள் தினமலரில் வாசகர் கடிதம் எழுதுபவர் என்றால் உங்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் யார் என்ற வெவரம் எல்லாம் வெள்ளிடை மலையாக தெரிந்திருக்கும்...தினமலரைப் பற்றி எழுதி என்/உங்கள் நேரத்தை வீனாக்கிவிட்டேனா ? வேறொன்னும் இல்லை தினமலர் அப்பாவிகளின் குரலாய் ஒலிப்பதைப் படித்து கீழே உதிர்ந்த எனது தலைமயிர் கூட சிலிர்த்தே நிற்கிறது. தினமலருக்குத் தான் அப்பாவிகள், பாமரர்கள் மீது என்ன ஒரு பாசம் ! தினமலர், இந்து(ராம்), துக்ளக்(சோ ராமசாமி) ஆகியவை நாள்தோறும் இலங்கையில் வாடும் தமிழர்களின் குரலாய் ஒலிக்கிறார்கள்!!!)

*****

கொழும்பில் விடுதலைப் புலிகளின் வான்படை பிரிவு தற்கொலைப் படை கரும்புலிகள் விமானத்தின் மூலம் குண்டு வீசிட்டார்களாம். அதற்குத்தான் ஐநா முதல் ஆளாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. வன்னியிலும் முல்லைத் தீவிலும், ஆளும் அரசு...மக்கள் பிரதிநிதி என்ற பெயரில் இலங்கை அரசு குண்டு மழை பொழிந்து தமிழினத்தை துடைத்தொழிக்கும் இன ஒழிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. ஒருபக்கம் 'தமிழர்கள் அழிந்துவிடுவார்கள்' என்று கவலைப்படும் ஐநா, அதை தடுத்து நிறுத்த எந்த நடவெடிக்கையும் எடுக்காமல் விடுதலைப் புலிகளின் நேற்றைய விமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஐநா நைனாக்களே....கொழுப்பில் வாழும் சிங்களன் உயிர்தான் உயிர்... இலங்கை இராணுவத்தின் குண்டு மழைக்கு பதுங்கு குழியின் அடியில் ஒடுங்கி நடுங்கியபடி இருக்கும் தமிழன் உயிர் மயிரா ? - அதெற்கெல்லாம் எந்த கண்டனமும் கிடையாதா ? இதை யாரும் கேட்கவில்லை, நம்ம தினமலர் பாணியில் சொல்லவேண்டு என்றால் இந்த கேள்வியை அப்பாவிகளும், பாமரர்களும் தான் கேட்கிறார்கள்

ஈழப்போராளிகளுக்கு ஓர் வேண்டுகோள், இலங்கை இராணுவத்திற்கு எதிராக போராடும் பொழுது, போராட்டத்தில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தலாமா ? ஐநாவிடம் கேட்டு முன் அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள், இல்லை என்றால் கண்டனம் தெரிவிப்பார்கள் - இதையும் அப்பாவிகள் தான் சொல்கிறார்கள்

3 கருத்துகள்:

தமிழன்-கறுப்பி... சொன்னது…

கடுமையான தாக்குதல்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

ஆனா உறைக்கணுமே...

nayanan சொன்னது…

ஐநா வை திருப்பிப் போட்டுப் படிக்கவேண்டும் :-(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்