பின்பற்றுபவர்கள்

28 ஆகஸ்ட், 2009

குருவி தலை(மை)யில் பனங்காய் !

2011ல் மீண்டும் காங்கிரசு ஆட்சியாம். பண்ணையார் ஆட்சி முறையை நல்ல பரப்புரை மூலம் அண்ணா தலைமையிலான திமுக அரசு வெற்றிகரமாக தமிழ் நாட்டில் இருந்து அகற்றியது. அதன் பிறகு தொடந்து 30 ஆண்டுகளாக 'திராவிட' பெயரிலான கட்சிகளே தமிழகத்தில் ஆட்சியை நடத்திவருவதும், அவர்களில் எதிர்கட்சியாக இருப்பவர்களின் முதுகில் காங்கிரஸ் பயணித்து மத்திய அரசு அமைத்துக் கொள்வதும் வாடிக்கை. திமுகவை உடைத்து அதிமுக என்று எம்ஜிஆர் தலைமையில் ஒரு கட்சியும் அமைந்து திமுகவிற்கு மாற்றுக் கட்சியாக்கியதில் காங்கிரசுக்கு பெரும் பங்கே உண்டு, அதைச் செய்தும் காங்கி்ற்கு மத்திய அரசு அமைக்கும் உதவி தவிர்த்து வேறொன்றும் கிடைக்கவில்லை. அண்டை மாநிலங்களிலெல்லாம் கொலொச்சும் காங்கிரசு தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் தேறுவதற்குக் கூட வாய்பில்லா நிலைதான் இன்றும் தொடர்கிறது. ஒரே ஒரு முறை மூப்பனார் தலைமையில் காங்கிரசு தனித்து நின்று 25 தொகுதிகள் பெற்றது, அதுவும் அதிமுக, ஜெ, ஜா, திமுக, காங்கிரசு என்று தனித்தனியாக நின்றதால் விழுந்த ஓட்டுகளின் விழுக்காடு அடிப்படையில் கிடைத்ததே அந்த வெற்றி, அதாவது அதிமுக உடையாது இருந்தால் காங்கிரஸ் மண்ணைக் கவ்வி இருக்கும், அதன் பிறகு எதாவது ஒரு திராவிடக் கட்சியின் மீது குதிரை சவாரி செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருப்பது தான் காங்கிரசு செய்யும் தமிழக அரசியல்.

காமராஜர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்பது தமிழக 'காங்கிரசாரின் ஒரு தமிழக கனவு' என்பது போல் அடிக்கடி தமிழக காங்கிரசின் (கோஷ்டி) தலைவர்களால் பேசப்படும், அதும் தேர்தல் நெருங்கும் போது, கூட்டணி அமைக்கும் முன்பு வரை மட்டுமே, அதன் பிறகு தேர்தல் முடியும் வரை வாயைத் திறக்க மாட்டார்கள். இந்தியாவை காங்கிரசு மயமாக்க ராகுல் காந்தி முயற்சி எடுக்கிறாராம். அவரது செயல்பாட்டின் வழி பீகாரில் காங்கிரசு கனிசமான வெற்றிகளை ஈட்டித்தந்ததாம். எனவே எதிர்கால காங்கிரசின் நம்பிக்கை நாயகனான ராகுலின் கடைக் கண் பார்வை கடைகோடி மாநிலமான தமிழகத்தில் விழுந்திருக்கிறது. எப்படி ? என்கிற யோசனையில் தான் நடிகர் விஜய் தெரிந்திருக்கிறார். விஜயின் தொறமை என்ன ? தகுதி என்ன ? என்றெல்லாம்,

இதுக்கும் மேல விஜய் பற்றி எழுதினால் விஜய் ரசிகர்கள் அர்சனை செய்வார்கள், விஜயின் தொறமை என்ன ? தகுதி என்ன ? என்பதை எழுத வினவு, அசுரன் போன்ற பெரும் தலைகள் இருக்கும் போது எனக்கு என்ன வேலை ?

கருப்பு எம்ஜிஆரின் (வருங்கால தமிழக முதல்வர்) கனவு வடையை குருவி கவ்விக் கொண்டு (போகக்) போகிறது.

வருங்கால முதல்வர் டாக்டர் விஜய் வாழ்க !!!

செய்தி : தினமலர்

32 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

புகைப்பட செய்தியா? நல்லாயிருக்கே

நட்புடன் ஜமால் சொன்னது…

செம காமெடி போங்கோ ...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தலைவர கிண்டல் பண்ணாட்டி பலருக்கு தூக்கம் வருவதில்லையாமே அப்படியா கோவிக்கண்ணன்

அறிவிலி சொன்னது…

ஏற்கெனவே ஒரு காமெடி பீசு எம்.பி ஆவலையா? அதே மாதிரி இதுவும் நடக்கலாம்.

குசும்பன் சொன்னது…

ஏய் யார்டா அங்க இந்த பாவி.கண்ணனை கட்டி போட்டு குருவி சீடிய போட்டுவிடுங்கடா! ஒருநாள் முழுவதும் பார்க்கட்டும்!

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/குசும்பன் said...

ஏய் யார்டா அங்க இந்த பாவி.கண்ணனை கட்டி போட்டு குருவி சீடிய போட்டுவிடுங்கடா! ஒருநாள் முழுவதும் பார்க்கட்டும்!/

அதுவும் பத்தலைன்னாக்க, வில்லு படத்தையும் சேத்துப் பாக்கணும்னு சொல்லாம வுட்டீங்களே! குசும்புக்குக் கொஞ்சம் இரக்கம் ஜாஸ்தி!

அப்பாவி முரு சொன்னது…

படத்துல அந்தபுள்ள ஏன் பெருமையாச் சிரிக்குது?

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
/குசும்பன் said...

ஏய் யார்டா அங்க இந்த பாவி.கண்ணனை கட்டி போட்டு குருவி சீடிய போட்டுவிடுங்கடா! ஒருநாள் முழுவதும் பார்க்கட்டும்!/

அதுவும் பத்தலைன்னாக்க, வில்லு படத்தையும் சேத்துப் பாக்கணும்னு சொல்லாம வுட்டீங்களே! குசும்புக்குக் கொஞ்சம் இரக்கம் ஜாஸ்தி!
//

நயன்தாரா இருப்பதால் வில்லு பார்ப்பது குருவி அளவுக்கு தண்டனையாக அமையாது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
ஏய் யார்டா அங்க இந்த பாவி.கண்ணனை கட்டி போட்டு குருவி சீடிய போட்டுவிடுங்கடா! ஒருநாள் முழுவதும் பார்க்கட்டும்!

12:26 PM, August 28, 2009
//

பாட்டெல்லாம் நல்லா தான் இருக்கும். பார்வேர்ட் பண்ணி பண்ணி பார்ப்பேன்

கோவி.கண்ணன் சொன்னது…

/ ஆ.ஞானசேகரன் said...
புகைப்பட செய்தியா? நல்லாயிருக்கே
//

புரட்சி கலைஞருக்கு புளி கரைக்கிற செய்தி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன்...வசந்த் said...
தலைவர கிண்டல் பண்ணாட்டி பலருக்கு தூக்கம் வருவதில்லையாமே அப்படியா கோவிக்கண்ணன்
//

தலைவரா யாருக்கு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
செம காமெடி போங்கோ ...

12:05 PM, August 28, 2009
//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
ஏற்கெனவே ஒரு காமெடி பீசு எம்.பி ஆவலையா? அதே மாதிரி இதுவும் நடக்கலாம்.
//

எங்க அஞ்சாநெஞ்சன் அண்ணனையா சொல்லிதிக ? ஓ....ஜேகேரித்தீஷ். அவருக்கென்ன என்னிக்குமே சூப்பர் ஹீரோ தானாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
படத்துல அந்தபுள்ள ஏன் பெருமையாச் சிரிக்குது?

3:32 PM, August 28, 2009
//

பக்கத்தில் உள்ள புள்ளையா ? அது அப்புராணி. அப்பு யாருன்னு கேட்கப்படாது

அப்பாவி முரு சொன்னது…

//கோவி.கண்ணன் said...
//அப்பாவி முரு said...
படத்துல அந்தபுள்ள ஏன் பெருமையாச் சிரிக்குது?

3:32 PM, August 28, 2009
//

பக்கத்தில் உள்ள புள்ளையா ? அது அப்புராணி. அப்பு யாருன்னு கேட்கப்படாது//

நல்லவேளை, நான் அப்பா-வியாப் போயிட்டேன்,

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பிறகு தொடந்து 30 ஆண்டுகளாக 'திராவிட' பெயரிலான கட்சிகளே தமிழகத்தில் ஆட்சியை நடத்திவருவதும், //


நாப்பது சாமியோவ்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

9 படம் பேஷா இருக்கு,

ஐ லைக் தட்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

குருவி தலை(மை)யில் பனங்காய் ! //


சிட்டுக்குருவி தலையில பனம்பழம் சாமியோவ்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வருங்கால முதல்வர் டாக்டர் விஜய் வாழ்க !!!//

மொதல்வர் பதவிவிக்கு வந்தா டாக்டர் பட்டம் என்கிற லட்டு பிரீ!

இந்தாளு, மொதல்வர் பதவிக்கு வர்ரத்துக்கு முன்னாடியே டாக்டர் பட்டம் வாங்கிட்டு எலிஜிபிலிட்டியோட வர்ரார். இவர் தான் மொதல்வர் பதவிக்கு தகுதியானவர்.

:)
--கொள்ளிமலை குப்பு

வேந்தன் சொன்னது…

நான் உங்களின் 200 ஆவது Follower.
இரட்டைச்சதம் அடித்ததிற்கு வாழ்த்துக்கள்.:)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

குருவி பனமரத்துல போய் இருந்தா

பனம் பழம் விழத்தான் செய்யும் !!!

Jackiesekar சொன்னது…

கடைசி வரி கலக்கலோ கலக்கல்

துபாய் ராஜா சொன்னது…

அதெல்லாம் சரி.கொ.ப.செ. யாரு நயன்தாராவா,த்ரிஷாவா இல்லை விஜய்யை வாழவைத்த தெய்வம் சங்கவியா..... :))

பீர் | Peer சொன்னது…

//கோவி.கண்ணன்
... நயன்தாரா இருப்பதால் வில்லு பார்ப்பது குருவி அளவுக்கு தண்டனையாக அமையாது !//

அண்ணே அவுகளா நீங்க.. படத்த பார்த்தப்பவே நெனச்சேன்.

சங்கம் ஆரம்பிச்சா ஒரு கார்டு போடுங்கண்ணே...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-)))

மங்களூர் சிவா சொன்னது…

/
இதுக்கும் மேல விஜய் பற்றி எழுதினால் விஜய் ரசிகர்கள் அர்சனை செய்வார்கள்,
/

அந்த பயம் இருக்கட்டும்
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. :)

200 வாழ்த்துக்கள் சொல்ல வந்தேன் :)

gnani சொன்னது…

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com
நேரடியாக கோலம், a/c no. 007705013590


நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com
நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

gnani சொன்னது…

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Sanjai Gandhi சொன்னது…

செம காமெடி கோவியாரே உங்க கிட்ட.. :)) சுப்ரமணியசாமி ப்ளாக் எழுதாத குறையை நீங்க தான் நிவர்த்திப் பண்றிங்க. :)) உத்திரப் பிரதேசத்துல காங்கிரஸ் தனிச்சி நின்னு எவ்ளோ ஜெயிச்சதுன்னு தெரியும்ல.. ரொம்ப கவனமா அதை தவிர்த்திருக்கிங்க. அந்த நேரத்துல உபில எந்த கட்சி சாமி ஒடைஞ்சது? யார் யார் முதுகுல சவாரி செய்றாங்கன்னு நீங்களே ஜோசியம் பார்க்காதிங்க. நீங்க சொல்ற திராவக சாரி திரவிடக் கட்சிகளை மொதல்ல தனித்தி போட்டியிட சொல்லுங்க. அப்புறம் முதுகு சவாரி பத்தி பேசலாம். இப்போ நடந்த இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நிலவரம் தெரியும் தானே? எங்க போச்சி அதிமுக பலம்? எப்டி கிடைத்தது 72, 77 சத வாக்குகள்?

//அவர்களில் எதிர்கட்சியாக இருப்பவர்களின் முதுகில் காங்கிரஸ் பயணித்து மத்திய அரசு அமைத்துக் கொள்வதும் வாடிக்கை. //

தமிழ்நாட்டை நம்பிதான் மத்தியில ஆட்சி அமையறமாதிரி ஒரு பீலா வேற.. எப்டி தான் சிரிக்காம எழுதறிங்களோ? :))

நீங்க இப்டியே வயிறு எரிஞ்சிட்டே இருங்க. காங்கிரஸ் இன்னும் பலமான கட்சியா மாறிட்டே இருக்கும்.


//இதுக்கும் மேல விஜய் பற்றி எழுதினால் விஜய் ரசிகர்கள் அர்சனை செய்வார்கள், //
ஹிஹி.. ரொம்ப தான் தைரியசாலி.. ஆளைப்பார்த்து தான் கருத்தா? :))

வாழ்க வளமுடன்.

காலம் சொன்னது…

வரட்டும் பார்ப்போம்

பித்தனின் வாக்கு சொன்னது…

பன்னையார் ஆட்சி போய், திராவிடக் கட்சிகள் வந்தன, மொத்த அரசியலும் நாறிப்போய்விட்டன. இதில் விஜய் வந்தால் என்ன ஒசாமா வந்தால் என்ன எல்லாம் ஒரே புன்னாக்குதான். கண்டவன் துண்டு போடும் இடத்தில் அவரும் தான் போடட்டும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்