பின்பற்றுபவர்கள்

14 அக்டோபர், 2011

கடன் சுறாக்கள் !

சட்டவிரோத கடன் கொடுப்பது சிங்கப்பூரில் குற்றம், கடனில் என்ன சட்ட விரோதம் ? அரசிடம் கடன் வழங்கும் நிறுவனங்களாக அனுமதி பெறாதவர்கள் அளிக்கும் கடன்கள் சட்டவிரோதம் என்கிறது சிங்கப்பூர் அரசு. அவர்களிடம் ஏன் கடன் வாங்க வேண்டும் ? எந்த ஒரு பொருள் அடமானமும் இல்லாமல் கடன் வழங்க முன்வருபவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதால் அடமானப் பொருள்கள் எதுவும் இல்லாதவர்கள் உடனடிக்கடனுக்கு அவர்களைத் தான் நாடுகிறார்கள், ஆனால் திருப்பிக் கொடுக்கும் திறன் பற்றி சட்டவிரோத கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆராய்வதில்லை, காரணம் மிரட்டியாவாது உயர்ந்த வட்டிக்கு கொடுக்கப்பட்டுவிடும் கடன்களை திரும்பப் பெற்றுவிடலாம் என்பது அந்நிறுவனங்களின் நம்பிக்கைகள், அவர்கள் அமர்த்தி இருக்கும் முகவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

சட்டவிரோத கடன் வழங்கும் நிறுவனங்களை 'லோன் சார்க்' அதாவது கடன் சுறாக்கள் என்கிறது சிங்கப்பூர் அரசு, அந்த 'லோன் சார்க்' என்னும் குறியீட்டுச் சொல்லில் அவர்களின் செயல்பாடுகளின் தீவிரமும் ஆபத்தும் அடங்கியுள்ளது.

பணத்தை வைத்து செய்யும் பணத்தொழிலில் உற்பத்தி செலவு மற்றும் விற்பனையில்லாமல் தேக்கம் என்கிற தொழில் குறியீடுகள் இல்லாததால் பணத் தொழிலான வட்டித் தொழிலை (பைனான்ஸ்) ஈடு (Yield) நிறைந்ததாகக் கருதுகின்றனர். கல்வி, வீடு, உந்துகள் (வாகனம்) ஆகியவற்றிற்கு அரசு சார்பு / அரசு வங்கிகள் வட்டிக்கு பணம் வழங்கினாலும், அவைச் சாராத உடனடி செலவுகளுக்கு தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள் முன்வருகின்றன. வெறும் குடியுரிமை அடையாள அட்டையைக் காட்டி கையொப்பம் இட்டு வேறு எதும் ஆவணங்கள் இன்றி தான் தனியார்களிடம் கடன் வாங்குகின்றனர். இதில் கடன் வழங்குபவர்கள் எடுப்பது 'ரிஸ்க்' தான். இந்த ரிஸ்க் எடுக்காவிட்டால் வேறு எதாவது தொழிலில் பணத்தை முடக்க வேண்டும், அதற்கான அரசு விதிகளைப் பின்பற்ற வேண்டும், தொழிலில் லாபம் வரும் என்ற முகாந்திரமும் இல்லை.

அவசரத்தேவைக்கு பணம் வாங்குபவர்களில் 50 விழுக்காட்டினர் திருப்பித்தர இயலாதவர்களாக பணத்தேவை மிக்கவர்களாக உள்ளனர், அவர்களில் வேலை யற்றோரும், சூதாடுபவர்களும் உண்டு, 'அடகுவைத்த பொருள்களை மீட்டு மறு அடகு வைக்க பண உதவி' மாதா பைனான்ஸ் விளம்பரம் போல் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வழங்கும் நிறுவனங்களில் கடன் வாங்கி வாங்கி விழிப் பிதுங்கும் போது பிறகு கடன் வாங்கியவர்கள் செல்பேசியை அணைத்து வைத்துக் கொண்டு, வேறெங்காவது சென்றுவிடுவார்கள், தொடர்ந்து நாளைந்து முறை அழைத்துப் பார்க்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஆள் தொடர்பிற்கு வருவதில்லை, பணம் வருவது கடினம் என்ற முடிவுக்கு வரும் போது, அவர்கள் பிற முகவர்களை அல்லது தான் திரைமறைவில் வேலைக்கு வைத்திருக்கும் நபர்களிடம் கடன் வாங்கிச் சென்ற வீட்டினரின் முகவரிகளைக் கொடுத்துவிடுகின்றனர்.


அந்த முகவரிக்கு செல்லும் நபர்கள் ஆட்கள் புழங்காத நேரமாகப் பார்த்து மின்தூக்கிகளைத் தவிர்த்துவிட்டு, படிக்கட்டு வழியாக ஏறி, உயரம் அதிகமான மாடிகளில் நடுவில் எங்காவது இறங்கி, பின் மாடிப் படி ஏறி, கையில் கொண்டு சென்றிருக்கும் வண்ணக் கலவையை (நிப்பான் பெயிண்ட் போன்றவை) கதவுகளில், சுவர்களில் தெளித்தோ, கிறுக்கியோ வைத்துவிட்டு ஓடிச் சென்றுவிடுவார்கள், இது போன்று செய்வதன் மூலம் அண்டைவீட்டுகாரர்கள் முன் கடன் வாங்கியவர் நாணும் நிலை ஏற்படும் கொடுத்தக் கடன் வந்துவிடும் என்று செய்கிறார்கள். சிலர் தனியாகக் கொண்டு வந்த பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு ஓடிவிடுவர். கேமராக்கள் வழியாக பிடிபடுபவர்களுக்கு கடுமையான சிறை தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன.

லோன் சார்க்குகள் கடனாளிகள் வீட்டின் முன்பு எழுதுவது 'O$P$' இதன் பொருள் "Owe money, Pay money"


எங்கள் வீட்டுக்கு கிழ்வீட்டில் வசிக்கும் ஒருவர் லோன் சார்கிடம் பணம் வாங்கி திருப்பி செலுத்தாததால் பெயிண்ட் ஊற்ற வந்தவன் யாரும் பார்க்காமல் விரைந்து செயல்பட நினைத்து நாங்கள் இருக்கும் அதே தளத்தின் வேறொரு வீட்டின் முன் ஊற்றிவிட்டுச் சென்றுவிட்டான். அதாவது 7 ஆம் மாடியில் ஊற்ற வந்தவன் 8 ஆம் மாடியின் ஒருவீட்டின் முன்பு ஊற்றி ஓடி இருக்கிறான், பிறகு சில நாள் சென்று கடன் பெற்ற நபரின் அஞ்சல் பெட்டி மீது பெயிண்ட் ஊற்றவந்தவன் எல்லாப் பெட்டிகளிலும் அது படும் படி செய்து ஓடிவிட்டான், இது போன்ற தேவையற்ற சங்கடங்களும் வசிப்போர்களுக்கு வந்து சேருகிறது. இதனால் தான் கடன் வழங்கிகளை கடுமையாக ஒடுக்கி வருகிறது சிங்கப்பூர் அரசு, சட்டவிரோதமாக கடன் பெறுவதற்கு கட்டுபாடுகள் நேரடியாக இல்லை, ஆனால் அவ்வாறு பெற்று சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்கிற அறிவுறுத்தலை அரசு எப்போதும் செய்கிறது ஆனால் வழங்குபவர்கள் சிக்கினால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு. லோன் சார்க்குகளிடம் பெயிண்ட் ஊற்றுபவர்களாக பணிபுரிவர்களில் சிங்கப்பூர் வாசிகள் மிகக் குறைவு, சமுகவிரோத குழுக்கள் (கேங்க்ஸ்டர்), சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், சட்டவிரோதமாக வேலையில் ஈடுபடுவர்கள் (வேறு வேலைக்கு வந்தவர்களை பகுதி நேரமாக இயக்க வைப்பது), படிக்க வந்த பிற நாட்டு மாணவர்கள் ஆகியோர்களைத்தான் இந்நிறுவனங்கள் நாடுவதாக இதுவரை கைது செய்ப்பட்டவர்களின் விவரங்களை வைத்து அறிய முடிகிறது.


தற்போது பல அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கிகளில் கேமரா பொறுத்தி பிற நபர்களின் செயல்பாடுகள் படம்பிடிக்கப்படுகிறது, மேலும் சட்டவிரோத கடன் வழங்கிகளின் செயல்பாடுகளை குறைக்கவும், முற்றிலும் ஒடுக்கவும் கடன் வழங்கும் நிறுவனங்களின் அறிவிப்புகள் குறித்த கட்டுபாடுகளை அறிவித்திருக்கிறது இன்று,

1.கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் தொடர்ப்புக்கு செல்பேசி எண்களை கொடுக்கக் கூடாது, லேண்ட் லைன் எனப்படும் அலுவலக எண்களை மட்டும் தான் கொடுக்க வேண்டும்
2. குறைந்த வட்டி என்று போடாமல் எந்த ஒரு (ஸ்டார், பின் விளக்கம்) * போடாமல் வட்டி விகிதம் மற்றும் பிற விதிகளை நேரடியாகவே விளம்பரங்களில் எழுத வேண்டும்
3. இதில் சொல்லப்பட்டு இருக்கிற விதிமீறலில் விளம்பரம் வந்தால் 20,000 வெள்ளிகள் தண்டம்(பைன்), ஆறு மாத சிறை மற்றும் உரிமம் நீக்கம் உள்ளிட்டவை கடுமையான நடவடிக்கை

கடன் வழங்கும் நிறுவனங்கள் எல்லை மீறி கடன் வாங்க ஆசையைக் கிளப்பிவிடுவம் வண்ணம் விளம்பரங்கள் செய்து பொது மக்களைத் தூண்டி சிக்கல் ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தியே இந்த வரையறைகளை சுட்டியுள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகள் வைத்திருப்பதால் சிங்கப்பூரில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்பவர்கள் மிகக் குறைவு. இருந்தாலும் அவமானம் ?

தேவைக்கு மிஞ்சி கடன் வாங்குபவர்கள், சட்டவிரோதமாக பணம் கொடுத்து வாங்குபவர்கள் என மான / அவமானம் பார்க்காதவர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். திருடுதல், ஏமாற்றுதல் போன்று பெரிய அளவில் இல்லாமல் திரும்பிக் கொடுக்க வழியில்லை என்று தெரிந்தும் கடன் வாங்குவது ஒருவகையான பிழைப்பு, சாமார்த்தியம் என்று நினைப்பவர்களாகவும், கவலையற்றவர்களாகவும் தான் அவர்களில் பலர் உள்ளனர்.

இணைப்பு : விக்கி கட்டுரை
கடன் வழங்கு நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசின் புதிய கட்டுபாடுகள்

5 கருத்துகள்:

kaialavuman சொன்னது…

கடுமையான சட்டங்கள் இருப்பதாகச் சொல்லப் படும் சிங்கையிலும் ”கந்து வட்டி பஞசாயத்தா”?.

”திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பதுதான் சரியோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கடுமையான சட்டங்கள் இருப்பதாகச் சொல்லப் படும் சிங்கையிலும் ”கந்து வட்டி பஞசாயத்தா”?. //

ஆனால் இங்கே கடன் கொடுத்தவங்க ஆளை அனுப்பி ஆட்டோவில் தூக்கி வந்து போட்டு தள்ளமாட்டாங்க.
:)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கடன் சுறாக்கள் !"!!!

சரியான தலைப்பு.

Thozhirkalam Channel சொன்னது…

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

Surya Prakash சொன்னது…

கந்துவட்டிக்காரர்கள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போல ,,,,,,,,,,,,,

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்